வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூட்டத்திலே தேன்துளி இராகம் - (2)
கர்த்தராம் இரட்சகர் மண்ணில் பிறந்தார்
தந்தையின் கோலமாய் முன்னணையிலே - (2)
1. பூரண அழகுநிறை பாலனின்
பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் - (2)
பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரே
பாக்கியம் பெற்றாரே ஆகா என்ன சந்தோசம் - (2)
2. வானத்திலே புது நட்சத்திரம் தோன்றவே
பாதை காட்டி பெத்தலகேமில் செல்லுதே - (2)
வான சாஸ்திரிகள் தொடர்ந்தனரே கான வேந்தனைக் கண்டனரே
வணங்கி உயர் காணிக்கை படைத்தனரே - (2)
3. என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே
எந்தன் உள்ளம் மீட்க வந்த இராஜனே - (2)
நீரே என்றும் எம் தலைவன் நீரே என்றும் எம் ரட்சகர்
நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன் - (2)
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible